தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Sunday, January 30, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி

       சென்னை புத்தகக் கண்காட்சி. வழக்கம் போல் இந்த வருடமும் சென்றிருந்தேன். ஆனால் முன்பைப் போல் இல்லாமல் இந்த வருடம் ஓரிரு நாட்களைத் தவிர எல்லா நாட்களுமே புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து நான் ஏழாம் வகுப்பிலிருந்து புத்தக கண்காட்சிக்கு செல்கிறேன் என நினைக்கிறேன்.வழக்கம் போல் இந்த முறையும் சில கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் மற்றும் பதிபகத்தார்களையும் தூரத்திலிருந்தே சந்தித்தேன். ”உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன்” என்று கூற நினைத்தும் அது அவர்களுக்கு மிகவும் பழகிப்போயிருக்கும் என்றும், என்னைப் போல் எத்தனைப் பேரை சந்தித்திருப்பார்கள், எத்தனைப் பேர் என்னைப் போலவே கூறியிருப்பார்கள் என்று நினைத்து பேசாமல் விட்டுவிட்டேன். இதில் கொடுமை மனுஷ்யபுத்திரனையும், சாருநிவேதாவையும் சந்தித்துவிட்டு பேசாமல் வந்ததுதான். ஏனெனில் மனுஷ்யபுத்திரன் ஜி-டாக்கில் என்னுடைய நண்பர். (அவரிடம் இதுவரை நேரில் பார்த்து பேசியதில்லை) அவரிடம் பிற்பாடு இதைப் பற்றி கூறிய போது நானும் அவரும் (சாருநிவேதா) இலக்கியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் என்றார். ஐயோ நானும் சந்தித்து பேசியிருக்கலாமே, தமிழ் இலக்கியம் பற்றி இன்னும் தெரிந்துக் கொண்டிருப்பேனே என நினைத்தேன். தவற விட்டேனே.
     கடந்த ஒரு வருடமாக நான் பணத்தை சேர்த்து வைத்தேன் புத்தகம் வங்குவதற்காக. ஆனால் அங்கு தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்க வேண்டும் என்று என்னுடைய நண்பரும் எழுத்தாளருமான திரு.சச்சிதானந்தமிடம் சொல்லியிருந்தேன். (ஏனெனில் அவர்களுக்கு அதிகமான் தள்ளுபடி விலை) ஆனால் எதிர்பாரத விதமாக அவர் ஆப்பிரேஷன் செய்து வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதால் அவரால் எனக்கு உதவ முடியவில்லை. ஆனால் அப்போதும் அவர் அவருடைய நண்பரிடம் (சந்தியா பதிப்பகத்தில் வேலை செய்கிறார்) ஆனால் நான் அதோடு நின்று விடாமல் என் குருவும் நெருங்கிய நண்பருமான்       டாக்டர். ரமேஷ் குமார் அவர்களிடம் சொல்ல, அவர் அங்கு ஒரு முக்கிய பதிபாலரான  பாலு அவர்களிடம் கூறி தள்ளுபடி விலையில் எளிதாக வாங்கிக் கொடுத்துவிட்டார். இதற்காக உதவிய திரு.சச்சிதானந்தம் அவர்கள், டாக்டர். ரமேஷ் குமார் அவர்கள், திரு. பாலு அவர்கள் மற்றும் சந்தியா பதிப்பகத்தின் நண்பர் என அனைவருக்கும் நன்றி. அவர்களால் சேமித்த பணத்தில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினேன். மற்றப்படி வழக்கம் போல கலக்கலான பட்டின்றம், சிறந்த புத்தகங்கள் என அனைத்தும் கலக்கல் தான்.
     மிக முக்கியமாக நீண்ட காலமாக நான் வாங்க நினைத்துக் கொண்டிருந்த சுஜாதாவின் புத்தகங்களை இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.  
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

உயிர்மை பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
1.   உயிரின் ரகசியம் – சுஜாதா
2.   60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா
3.   பார்வை 360 – சுஜாதா
4.   கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5.   கடவுளின் பள்ளத்தாக்கு – சுஜாதா
6.   ஹைக்கூ – ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
7.   தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா
8.   புதிய நீதிக் கதைகள் – சுஜாதா

கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
9.   காஷ்மீர் – பா.ராகவன்
10. ஜின்னா – தரணி
11. சீனா – விலகும் திரை – பல்லவி அய்யர்
12. கி.மு கி.பி – மதன்
13. ஆர்.எஸ்.எஸ் - பா.ராகவன்

சந்தியா பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
14. புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை – ஆத்தை லில்லி –
தமிழில் சிவ.முருகேசன்
15. வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் – ச.சரவணன்

விசா பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
16. தலைமைச் செயலகம் – சுஜாதா
17. தூண்டில் கதைகள் – சுஜாதா
18. மீண்டும் தூண்டிக் கதைகள் – சுஜாதா
19. ஓரிரு எண்ணங்கள் – சுஜாதா

தமிழினி பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
20. கடல் புறா
21. வானியல் விஞ்ஞானிகள் – ஜெயபாரதன்
22. Organic Intelligence – Within and Beyond – Amalam Stantey

ரமணாச்ரமத்தில் வாங்கிய புத்தகங்கள்:
23. மகரிஷி அருண்மொழி – பால் பிரண்டன் – தமிழில் ஸ்வாமி ஹம்ஸானந்தா
24. மகரிஷி வாய்மொழி

பீக்காக் பதிப்பகத்தில் வாங்கிய புத்தகங்கள்:
25. பனிமலை பிரதேசத்துக் கதைகள் – சச்சிதானந்தம்
26. சித்திரா – இரவீந்திரநாத் தாகூர் – தமிழில் – சச்சிதானந்தம்
27. கோமளம் குமரியானது – பண்டித நடேச சாஸ்திரி
28. ஆரண்யம் 1
29. ஆரண்யம் 1
மற்றும்
30. Oxford English Tamil Dictionary
31. Why had the Moon Deceived the Apollo Astronauts 

No comments: